நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

வெளியானது ஷாருக்கானின் டன்கி டிரைலர்!

நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகியுள்ள டன்கி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :5 டிசம்பர் 2023, 12:01 pm IST

இயக்குநர் அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் படம் 1200 கோடி வசூலித்தது. 

பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் திரைப்படம் டன்கி. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

பஞ்சாபில் இருந்து கனடாவுக்கு டாங்கி பிளைட் முறையில் சென்ற ஒருவரின் கதையைத் தழுவி உருவாகியுள்ள படத்தில் ஷாருக்கான், டாப்ஸி இன்னும் சிலர் லண்டன் செல்ல விரும்புவதாக டீசரில் காட்டப்படுகிறது. 

கழுதைப் பயணம் என்று சொல்லப்படுகிற இந்த முறை மேற்குலக நாடுகளுக்குச் சட்டத்திற்குப் புறம்பாக அனுப்பப்படும் இந்தியர்களின் பயணத்தைக் குறிக்கிறது. இதனை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் டிச.21ஆம் தேதி வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.