புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பிக்பாஸ் வெற்றியாளர் கைது!

தெலுங்கு பிக்பாஸ் வெற்றியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :21 டிசம்பர் 2023, 6:09 am

பிக்பாஸ் போட்டிகள் பான் இந்திய மொழிகளில் நடைபெற்று வருகிறது. தமிழில் கமல்ஹாசன், மலையாளத்தில் மோகன் லால், தெலுங்கில் நாக சைதன்யா உள்ளிட்டோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், சமீபத்தில் நிறைவடைந்த தெலுங்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் யூடியூபர் பல்லவி பிரசாந்த் என்பவர் வெற்றி பெற்றார். 

இறுதிப்போட்டியில் அவர் வென்று, ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்ததும் அவரின் ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்றார். அப்போது, ரசிகர்கள் சிலர் தோல்வியடைந்த போட்டியாளர்களின் கார்களைக் கடுமையாக சேதப்படுத்தியுள்ளனர். மேலும், பொது மக்களுக்கு இடையூறான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்ந்து, பல்லவி பிரசாந்த் மீதும் அவரின் ரசிகர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. தற்போது, பல்லவி பிரசாந்த் கைது செய்யப்பட்டு 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிக்பாஸின் டைட்டில் வின்னர், தன் ரசிகர்களாலேயே கைது ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.