இயக்குநர் துரை செந்தில்குமார் எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது, நடிகர் சூரியை வைத்து ‘கருடன்’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் அடுத்ததாக துரை செந்தில் குமார் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியகியுள்ளது.
இதையும் படிக்க: இந்த வார டாப் 10 தொடர்களின் டிஆர்பி பட்டியல்!
லெஜண்ட் படத்திற்குப் பின், கதைகளைக் கேட்டு வந்தவருக்கு துரை செந்தில்குமார் சொன்ன கதைப் பிடித்திருந்ததால் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்!