மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

இது அழகான கதை; அதனால்தான் இவ்வளவு நேசிக்கிறீர்கள்: டன்கி 5ஆம் நாள் வசூல்!

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படத்தின் 5ஆம் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

Published On :

பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த டன்கி திரைப்படம் கடந்த டிச. 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் டாப்ஸி, விக்கி கெளஷல், சதீஷ் ஷா, தியா மிர்சா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 

உலகளவில் வெளியான இப்படம் இதுவரை விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. 

Story image

உலகம்  முழுவதும் ரூ. 58 கோடி வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது. அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் படம் முதல்நாளில் ரூ. 129.6 கோடி வசூலித்தது. டன்கி படம் இதில் 50 சதவிகிதத்தைக்கூட வசூலிக்கவில்லை. ஆக்‌ஷன் அல்லாத படங்களுக்கு இது சகஜம் என விமர்சகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். 

இந்நிலையில் 5ஆம் நாளில் படம் ரூ. 256.40 கோடி வசூலித்துள்ளது. படக்குழு இதனை, “இது அழகான கதை; அதனால்தான் நீங்கள் இவ்வளவு நேசிக்கிறீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது. 

ஆக்‌ஷன் கதைகளுக்கு மத்தியில் ஃபீல் குட் திரைப்படங்களும் வரவேற்க வேண்டுமென விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.