10 ஆண்டுகள் கழித்தும் கேப்டன் மில்லர் நினைவூட்டப்படும்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!

கேப்டன் மில்லர் படம் 10 ஆண்டுகள் கழித்தும் நினைவூட்டப்படுமென இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார். 
10 ஆண்டுகள் கழித்தும் கேப்டன் மில்லர் நினைவூட்டப்படும்: ஜி.வி.பிரகாஷ் புகழாரம்!
Published on
Updated on
1 min read

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இதில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ்  தயாரித்துள்ளது. 

கேப்டன் மில்லர் படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாக உள்ளதாகவும், இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடம் என தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர் படம் வரும் ஜன. 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும்,  மத்திய தணிக்கை வாரியம்  இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழை அளித்துள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், “கேப்டன் மில்லர் படம் இன்னும் 10 ஆண்டுகள் கழித்தும் கொண்டாடப்படும். அதற்கான பல காட்சிகள் படத்தில் இருக்கின்றன. ஆயிரத்தில் ஒருவன் படம் போல இதனையும் கொண்டாடுவார்கள். படம் வெளியான பிறகு இதன் பின்னணி இசை பேசப்படும்” எனக் கூறியுள்ளார். 

இதனால் கேப்டன் மில்லர் படத்துக்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com