நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிரம்மாண்ட இயக்குநர் படத்தில் விஜய், ஷாருக்கான்?

பிரபல இயக்குநர் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் விஜய், ஷாருக்கான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2023, 12:01 pm IST

பிரபல இயக்குநர் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் விஜய், ஷாருக்கான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்கிற புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

அதேபோல், நீண்ட நாள்களுக்குப் பின் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படமும் ரூ.900 கோடி வசூலித்து பாலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கரின் மிகப்பிரம்மாண்டமான படத்தில் நடிக்க விஜய் மற்றும் ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது, ஷங்கர் கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தையும் ராம்சரணை வைத்து ‘ராம்சரண் 15’ படத்தையும் இயக்கி வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் தண்ணீரை மையமாக வைத்து சைன்ஸ் பிக்சன் படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.

ரூ.1000 கோடியில் உருவாகும் இப்படத்தில் நாயகர்களாக விஜய்யும் ஷாருக்கானும் நடித்தால் இந்திய அளவில் பல வசூல் சாதனைகளைச் செய்யலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.