புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பொன்னியின் செல்வன் காலண்டர் வெளியீடு!

பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ள மாதக் காலண்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2023, 2:42 pm IST

பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ள மாதக் காலண்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்றது.

விக்ரம், ஜெயம் ரவி, காா்த்தி, த்ரிஷா, ஐஸ்வா்யா ராய், ஐஸ்வா்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமாா், பாா்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், லால் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகம் மட்டும் ரூ. 500 கோடி வசூலித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புத்தாண்டை முன்னிட்டு படத்தின் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் கொண்ட‘நாம் 2023’ என்ற மாத காலண்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த காலண்டர் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி, ரஹ்மான், ஜெயராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.