பிக் பாஸ் போட்டி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், பணப்பெட்டியுடன் யார் கிளம்ப போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 போட்டி கடந்த அக்டோபர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா, விக்ரமன், ஆயிஷா, அமுதவாணன், பாடகர் ஏடிகே, மைனா நந்தினி, ஜனனி, அஷீம், தனலட்சுமி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டா, குயின்ஸி, ராம், சிவின், நிவாசினி, செரினா, அசல், சாந்தி, ஜி.பி.முத்து உள்ளிட்ட 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 6-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை சாந்தி, அசல், செரினா, மகேஸ்வரி, நிவாசினி, ராபர்ட், குயின்ஸி, ராம், ஜனனி, ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டா, ரச்சிதா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜி.பி. முத்து தனிப்பட்ட காரணங்களால் தானாகவே போட்டியைவிட்டு விலகினார்.
இதையும் படிக்க | தெலுங்கில் 3 நாள்கள் தள்ளிப்போன வாரிசு ரிலீஸ்
இந்நிலையில், 7 போட்டியாளர்கள் 14வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளனர். இதில், கடந்த வாரம் ‘டிக்கெட் டூ பைனல்’ டாஸ்கில் வெற்றி பெற்ற அமுதவாணன் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்.
கடைசி வாரத்தில் 5 போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்ற நிலையில், இன்னும் இருவர் வருகின்ற வாரத்தில் வெளியேற்றப்படுவார்கள்.
இதற்கிடையே, இந்த வாரம் பணப்பெட்டி அறிமுகப்படுத்தப்படும். அதிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேற நினைப்பவர்கள் சம்பளத்துடன் பெட்டியில் இருக்கும் பரிசுப் பணத்துடன் செல்லலாம்.
பெட்டியில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் செல்லும் பட்சத்தில், இந்த வார இறுதியில் ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேற்றப்படுவார்கள். பணப்பெட்டியை யாரும் எடுக்காத பட்சத்தில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் செய்யப்பட்டு இருவர் வெளியேற்றப்படுவார்கள்.
நேற்று கமல் நிகழ்ச்சியில் பணப்பெட்டியை யார் எடுத்துக் கொண்டு போனால் சிறப்பாக இருக்கும் என்ற கேள்விக்கு பெரும்பாலான போட்டியாளர்கள் கதிரவனை கூறினார்கள். கதிரவனும் அவரையே கூறினார் என்பது சற்று யோசிக்க வைக்கிறது.
இதனால், இந்த வாரம் அறிமுகப்படுத்தப்படவுள்ள பணப்பெட்டியை கதிரவன் எடுத்துச் செல்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த சீசன்களில் கவின், கேப்ரிலா, சிபி ஆகியோர் பணத்துடன் சென்றதை போல் இம்முறை பணப்பெட்டியை யார் எடுப்பார்கள்? எவ்வளவு எடுப்பார்கள்? என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.