நிறப்பாகுபாடு பேசும் பேரழகி-2! ஜூலை 3 முதல் புதிய தொடர்!

கன்னட மொழியில் எடுக்கப்பட்ட தொடரைத் தழுவி தமிழில் பேரழகி என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 
நிறப்பாகுபாடு பேசும் பேரழகி-2! ஜூலை 3 முதல் புதிய தொடர்!
Updated on
2 min read

கன்னட மொழியில் எடுக்கப்பட்ட தொடரைத் தழுவி தமிழில் பேரழகி -2 என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. 

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இதற்கு முன்பு கடந்த 2018ஆம் ஆண்டு பேரழகி முதல் பாகம் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

அதனைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு பேரழகி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற லக்சனா தொடரின் டப்பிங் தழுவலாகும். நக்‌ஷத்ரா, சுக்ருதா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். 

இக்கதை 2 பெண்களைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த 2 குழந்தைகளையும் 23 ஆண்டுகளுக்கு முன்பு  மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் மாற்றி வைத்து விடுகிறார். 

இதில் நக்‌ஷத்ரா கருப்பாக இருப்பதால் அவரை மகளாகவும், பேத்தியாகவும் அவரது தந்தை - தாய் ஏற்றுக் கொள்ளவில்லை. 

தானும் தனது மனைவியும் நல்ல சிவப்பு நிறத்தில் இருப்பதால், நக்‌ஷத்ரா தன்னுடைய மகளாக இருக்க முடியாது என்று அவரது தந்தை எண்ணுகிறார்.  

வளர்ந்த பிறகு தொகுப்பாளராக வேண்டும் என நக்‌ஷத்ரா நினைக்கிறார். ஆனால் கருப்பாக இருப்பதால் புறக்கணிக்கப்படுகிறார். இறுதியில் வெள்ளையாக இருக்கும் சுக்ருதா நடிப்பதற்கு, நக்‌ஷத்ரா குரல் கொடுக்கிறார். சுக்ருதாவின் குரலால் ஈர்க்கப்பட்ட இளைஞர் சுக்ருதாவை காதலிக்கிறார். ஆனால் அந்தக் குரல் நக்‌ஷத்ரா உடையது. இவர்கள் மூவருக்குள் நடக்கும் கதையே பேரழகி.

இந்தத் தொடர் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

சுக்ருதா - நக்‌ஷத்ரா
சுக்ருதா - நக்‌ஷத்ரா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com