
இலக்கியா தொடரிலிருந்து நடிகர் ஜெய் ஸ்ரீனிவாச குமார் விலகியுள்ளார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று இலக்கியா. இத்தொடரில் நந்தன் லோகநாதன் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும், ரூபாஸ்ரீ, சுஷ்மா நாயர், காயத்ரி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இலக்கியா தொடரில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஜெய் ஸ்ரீனிவாச குமார் தொடரில் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சன் டிவின் புது சீரியலான மீனா தொடரில் ஜெய் ஸ்ரீனிவாச குமார் கதாநாயகனாக நடிக்க தொடங்கி உள்ளதால் இலக்கியா தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க: புரட்சி வசனங்கள்! 200 நாள்களை நிறைவு செய்த இனியா சீரியல்!!
இதனால் இவருக்கு பதில் சுந்தரி தொடரில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்துவரும் அரவிஷ் நடிக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.