6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பீஸ்ட் தோல்விப் படமா? சூப்பர் ஸ்டார் பட்டமே தொல்லைதான்: ரஜினியின் வைரல் பேச்சு! 

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

News image
Updated On :29 ஜூலை 2023, 5:32 am

DIN

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானபோது சமூக வலைதளங்களில் இயக்குநர் நெல்சன் அதிகமான கிண்டல்களுக்கு உள்ளானார். அதனால் ரஜினியுடனான படம் நடக்குமா நடக்காதா என  சூழல் அப்போது நிலவியது குறிப்பிடத்தக்கது. 

ஜெயிலர் படத்தின் 2வது பாடலான ஹுக்கும் பாடலில் ’பட்டத்தை பறிக்க 100 பேரு’ என்ற வரிகள் பேசுபொருளானது. சூப்பர் ஸ்டார் யார் என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் விவாததுக்குள்ளானது. 

Story image

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன்,  கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

நேற்று ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடந்து முடிந்தது. இதில் நடிகர் ரஜினிகாந்த், “பீஸ்ட் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வந்தன. நான் கலாநிதி மாறன் அவர்களிடம் இது குறித்து விசாரித்தபோது படம் ‘நெகட்டிவ ரிவிவ் வந்தாலும் விநியோகஸ்தர்களுக்கு லாபம்தான்’ எனக் கூறினார். எனக்கு நெல்சன் மீது நம்பிக்கை இருந்தது. கதை கேட்க 10 மணிக்கு நெல்சனை வரச் சொல்லியிருந்தேன். நெல்சன் இரவு தூங்க தாமதமாகும் என்பதால் காலையில் 11 மணிக்கு வருவாரென தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நெல்சன் வரும்போது 12 மணி ஆகிவிட்டது. வந்ததும் என்ன சாப்பிடுகிறீர்கள் என கேட்டபோது, ‘நல்லதா ஒரு காஃபி இருந்த சொல்லுங்க சார்’ என்றார் நெல்சன்” என ரஜினி கலகலப்பாக பேசினார். 

மேலும், “சூப்பர் ஸ்டார் பட்டம் என்றாலே தொல்லைதான். அதை ஏற்கனவே நான் டைட்டலில் போடவேண்டாமென கூறினேன். அப்போது ரஜினி பயந்து விட்டாரென கூறினார்கள். நான் 2 பேருக்கு மட்டுமே பயப்படுவேன். ஒன்று கடவுளுக்கு இன்னொன்று நல்ல மனிதர்களுக்கு” என மாஸாக ரஜினி பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.