வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

ஸ்வீட் காரம் காப்பி: ஓடிடியில் வெளியாகும் புதிய இணையத் தொடர்! 

நடிகைகள் லக்‌ஷ்மி, மதுபாலா, சாந்தி நடித்துள்ள புதிய இணையத்தொடர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

News image
Updated On :27 ஜூன் 2023, 4:07 pm IST

தமிழில் 80களில் புகழ்பெற்ற நடிகையான லக்‌ஷ்மி, 90களில் புகழ்பெற்ற மதுபாலா, இரண்டாயிரத்துக்கு பிறகு மலையாள சினிமாவில் கவனம் பெற்ற நடிகை சாந்தி பாலசந்திரன் ஆகிய மூன்று தலைமுறை சேர்ந்த நடிகைகள் இணைந்து நடித்துள்ள இணையத் தொடர்தான் ஸ்வீட் காரம் காப்பி. 

நடிகை சாந்தி 

நடிகை சாந்தி 

இந்தத் தொடரினை பிஜோய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து, ஸ்வாதி ரகுராம் ஆகியோர் இயக்கியுள்ளனர். லயன் டூத் ஸ்டுடியோஸ் தயாரித்து அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. 

நடிகை மதுபாலா

நடிகை மதுபாலா

இந்தத்தொடரில் 8 எபிசோடுகள் இருக்குமென தகவல் வெளியாகியுள்ளது. இந்த் தொடருக்கு  ரேஷ்மா கட்டாலா, ஸ்வாதி ரகுராம், வினித்ரா மாதவன் மேனன், கிருஷ்ணசாமி ராம்குமார் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்கள். 

நடிகை லக்‌ஷ்மி

நடிகை லக்‌ஷ்மி

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறை பெண்கள் பயணம் மேற்கொள்ளும்போது நடப்பவையே கதையாக உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன். கோவிந்த்   வசந்தா இசையமைத்துள்ளார்.

Story image

அமேசான் ப்ரைம் ஓடிடியில் ஜூலை 7ஆம் நாள் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.