பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

என்ன வேணுமோ எல்லாமே உந்தி: தில் ராஜு பாணியில் பேசிய வெங்கட் பிரபு! 

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் மாதிரி இயக்குநர் வெங்கட் பிரபு பேசிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:26 pm IST

மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கிவரும் திரைப்படம் கஸ்டடி. நாக சைதன்யா நாயகனாக நடித்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடித்துள்ளார்.  

இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி, வெண்ணிலா கிஷோர், அர்விந்தசாமி ஆகியோர் நடித்துள்ளனர். 

வரும் 12ஆம் தேதி இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. மே 5ஆம் தேதி டிரைலர் வெளியானது. 

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது சமூக வலைதளத்தில் அவருக்கென தனி ரசிகர்கள் உருவானார்கள். அவர் பேசியது போலவே இயக்குநர் வெங்கட் பிரபு ஹைதராபாத் நிகழ்ச்சியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. தலுங்கில் உந்தி என்பது இருக்கு என்பது அர்த்தம். அவர், “ஆக்‌ஷன் வேணுமா ஆக்‌ஷன் உந்தி, பர்பாமென்ஸ் வேணுமா பர்பாமென்ஸ் உந்தி, செண்டிமெண்ட் வேணுமா செண்டிமெண்ட் உந்தி” என அவர் பேசினார். இதற்கு நடிகர் நாக சைதன்யா விழுந்து விழுந்து சிரித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.