நாக சைதன்யாவும் சமந்தாவும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ஏ மாயம் சேசாவே என்ற படத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். நண்பர்களாக இருந்த இருவரும் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்திருந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரபூர்வமாக இருவரும் பிரிந்ததாக அறிவித்தனர்.
இதையும் படிக்க: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
சமந்தாவின் யசோதா திரைப்படம் முதல்நாளில் உலகம் முழுவது ரூ.6.32 கோடி வசூலானதாக தகவல் வெளியானது. தற்போது நாக சைதன்யா வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியுள்ள கஸ்டடி திரைப்படம் குறைவாக வசூலிட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சிலர் ரூ.7 கோடி வசூலானதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: ரசிகர்களை காலி செய்திருக்கும் கஸ்டடி: திரைவிமர்சனம்
இதனால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சமந்தாவை விட குறைவாக வசூலிட்டியுள்ளதாக நாக சைதன்யாவை கிண்டல் செய்து வருகின்றனர்.
வசூல் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியானால்தான் தெரியும் என நாக சைதன்யா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.