நடிகர் சிம்புவிற்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் 48வது படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார்.
சமூக வலைதளங்களில் சிம்பு 48 படத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்திய படமாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு ரூ.100 கோடி பட்ஜெட் ஆகுமென தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தீபிகா படுகோன் கதாநாயகியாக இருந்தால் பொருத்தமாக இருக்குமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி நேர்காணல் ஒன்றில், “இந்தப் படத்தின் கதையை முதலில் ரஜினி சாருக்கு சொன்னேன். அவர் நடிக்கவில்லை. பின்னர் இதே கதையைதான் எந்த மாற்றமும் இல்லாமல் சிம்பு சாரிடம் கூறினேன். அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் மிகுந்த கவனமாக நடிக்க சிம்பு சார் பல பெரிய படங்களில் நடிக்க மறுத்துள்ளார்.
இதையும் படிக்க: சித்தா: ஓடிடி அறிவிப்பு!

இந்தப் படத்துக்காக நடிகர் சிம்பு, புதிய சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு கெட்டப்புகளில் நடிக்க உள்ளார். விரைவில் கதாபாத்திரங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும். அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










