நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

இலக்குகள் அனைத்தும் உங்கள் தீரா புன்னகையின் வழி சாத்தியமாகட்டும்: அமைச்சர் உதயநிதிக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!

இயக்குநர் மாரி செல்வராஜ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனக்கே உரிய பாணியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Published On :2 பிப்ரவரி 2024, 8:56 am IST

தமிழ்த் திரையுலகில் ‘பரியேறும் பெருமாள்’ என்கிற தனது முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். 

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களுக்கு அடுத்ததாக நான்காவது திரைப்படமாக வாழை படத்தினை, அவரே தயாரித்து இயக்கியுள்ளார்.

சிறுவர்கள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு. 

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக மாமன்னன் படம் அமைந்தது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினையும் பெற்றது மாமன்னன் திரைப்படம். இந்தப் படத்துடன் நடிப்புக்கு ஓய்வை தெரிவித்து அமைச்சராக தனது பணியை தொடர்கிறார் உதயநிதி. 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின் சார். உங்கள் இலக்குகள் அத்தனையும் உங்கள் தீரா புன்னகையின் வழி சாத்தியமாகட்டும். மாமன்னன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.