2017-ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இதில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது.
இந்த இயக்குநரின் அனிமல் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இதில் ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ஹமாஸுக்கு ஆதரவளித்ததால் வருவாயை இழந்த மியா கலிஃபா!
பிரபல சன்னி தியோலின் சகோதரான பாபி தியோல் படத்தின் வில்லனாக நடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா படத்திலும் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஃபகத் ஃபாசிலுக்காக கதை எழுதியுள்ள லோகேஷ் கனகராஜ்!
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் வெளியாக இருந்த நிலையில் டிச.1ஆம் தேதி வெளியாகுமென இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: லியோ 3வது பாடல் எப்போது?: அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்நிலையில் முதல் பாடலான ‘நீ வாடி’ எனும் பாடல் நாளை வெளியாகுமென ராஷ்மிகா பதிவிட்டுள்ளார்.
இந்தப்பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. “இந்தப் பாடல் தீயாக இருக்கும். தனிப்பட்ட முறையில் அனைத்து மொழிகளிலும் இந்தப் பாடல் மிகவும் பிடித்துள்ளது” என ராஷ்மிகா கூறியுள்ளார்.