மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

திரைப்பட கதாநாயகியாகும் செம்பருத்தி சீரியல் நடிகை!

செம்பருத்தி சீரியல் நடிகை சந்தானத்தின் ஜோடியாக நடிப்பதன் மூலம் திரைப்பட கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

கோப்புப் படம்

Published On :

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்து சமீபத்தில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதையடுத்து சந்தானம் இயக்குநர் ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்கிறார். எழிச்சூர் அரவிந்தன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 

இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக தொலைக்காட்சித் தொடர் நடிகை பிரியாலயா நடிக்கிறார். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் நடிகையாவார். சந்தானம் படத்தில் நடிப்பதன் மூலம் பிரியாலயா சின்னத்திரையில் இருந்து திரைப்பட கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

தம்பி ராமையா, முனீஷ் காந்த், மாறன்,  விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். ஓம் நாராயண் ஒளிப்பதிவில் உருவாகிவரும் இப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதன் தலைப்பு, முதல் தோற்றம் மற்றும் வெளியிடும் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளன. 

பிரியா பவானி சங்கர், வாணி போஜன் ஆகிய நடிகைகள் ஏற்கனவே சின்னத் திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு சென்ற நிலையில், தற்போது பிரியாலயாவும் அந்த வரிசையில் இணைய உள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.