பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா அறிவுமணிக்கு சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது.
காவ்யா அறிவுமணி முன்னதாக, பாரதி கண்ணம்மா தொடரின் முதல் பாகத்தில் அறிவு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர், அத்தொடரில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில், சித்ராவுக்கு பின், இவர் நடித்து வந்தார். அதன் பிறகு, படவாய்ப்பு காரணமாக அந்த தொடரில் இருந்தும் விலகினார்.
இந்த நிலையில், நடிகை காவ்யா அறிவுமணிக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பால் பண்ணை ஆரம்பித்த கயல் தொடர் நாயகி!
அந்தப் பதிவியில், "வாழ்க்கையில் எதிர்பார்த்தது நடந்துள்ளது. நான் அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன். நீங்கள் என் மீது காட்டிய அன்பிற்காக, என் கடைசி மூச்சு இருக்கும் வரை உங்களை மகிழ்விப்பேன். எனது பயணத்தில் பின்னணியில் இருந்த அனைவருக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 5 - நேரலை!

துறை ஒதுக்கீட்டில் அதிருப்தி! கர்நாடகத்தில் பதவியேற்ற 2 நாளில் அமைச்சர் ராஜிநாமா!

27 கருடசேவை... 18 நவநீத சேவை!

ஆபாசம், அருவருப்பு... பெத்தி படக்குழுவை விமர்சிக்கும் ஜான்வி கபூர் ரசிகர்கள்!
விடியோக்கள்

பாஜகவில் இருந்து விலகியது ஏன்?அரசியல் இயக்கம் தொடங்குவது ஏன்? Annamalai விளக்கம்!

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



