பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டுமுதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடர் அண்ணன், தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் கொண்டது. இதில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இந்தத் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகள் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. அதில் வரும் அக்.30 ஆம் தேதி முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், மூத்த அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த ஸ்டாலின் தொடர்ந்து நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தனம் கதாபாத்திரத்தில் நிரோஷா நடிக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் அண்ணன் - தம்பி பாசத்தை மையமாக எடுக்கப்பட்டது.
ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ம் பாகம் தந்தை - மகன் பாசத்தை அடிப்படை கொண்ட கதையாக தெரிகிறது.
இதையும் படிக்க: இந்த வாரம் பிக் பாஸிலிருந்து வெளியேறியது யார்?
இந்த நிலையில், இத்தொடரில் நடிகர் அஜய் ரத்னம் இணைந்துள்ளார். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர். ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2-ம் பாகத்தில் எந்த கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.