கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிச்சா சுதீப்பின் 47வது திரைப்படமான இதை, இயக்குநர் சேரன் இயக்குகிறார்.
கன்னடத்தில் உருவாகும் இப்படம் தமிழிலும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கேஜிஎஃப் படக் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஸ்ரீநிதி ஷெட்டி கேஜிஎஃப் படத்தினை அடுத்து தமிழில் விக்ரம் நடித்த கோப்ரா படத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.
இதையும் படிக்க: கோவை: போக்சோ வழக்கில் காவல் உதவி ஆய்வாளர் கைது
தற்போது நடிகர் சுதீப் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் தமிழ், கன்னடத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்கி வருகிறார். இதனையடுத்து அவர் சேரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இயக்குநர் சேரன் கடைசியாக 2019-ஆம் ஆண்டு திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இதையடுத்து தற்போது இப்படத்தினை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.