தீப ஒளியில் மின்னும் ரம்யா பாண்டியன்!

நவராத்திரி விழாவினை முன்னிட்டு நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தீப ஒளியில் மின்னும் ரம்யா பாண்டியன்!
Published on
Updated on
2 min read

நவராத்திரி விழாவினை முன்னிட்டு நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, ஒரே இரவில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை படத்தில் நடித்தார். மலையாள நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம்  படத்திலும் இவர் நடித்திருந்தார்.

கும் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் 4வது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். 

இந்த நிலையில், நவராத்திரி விழாவினை முன்னிட்டு சிறப்பு போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.

தற்போது, ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com