மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

எதிர்நீச்சலுக்கு வந்த சோதனை: இந்த வார டிஆர்பி பட்டியல்!

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து மறைவுக்குப் பிறகு, இத்தொடரின் டிஆர்பி புள்ளிகள் தொடர்ந்து குறைந்து வருகிறது.

News image
Updated On :28 அக்டோபர் 2023, 2:39 pm IST

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்து மறைவுக்குப் பிறகு, இத்தொடரின் டிஆர்பி புள்ளிகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. 

சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் தொடர்களைக் காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதன்படி, எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வாரம் எந்த தொடர்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன என்பதைப் பார்க்கலாம்.

கடந்த வாரம் நான்காவது இடத்தில் இருந்த வானத்தைப்போல தொடர் 10.40 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, இந்த வாரம் முதலிடத்தில் உள்ளது. கயல் தொடர் 10.14 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

Story image

சுந்தரி தொடர் 9.75 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் ஐந்தாம் இடத்தில் இருந்த சிங்கப் பெண்ணே தொடர் 9.62 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.

எதிர்நீச்சல் தொடர் 9.55 டிஆர்பி புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. சென்ற வாரம் ஆறாம் இடத்தில் இருந்த சன் டிவியின் இனியா தொடர் 8.16 டிஆர்பி புள்ளிகளுடன் தொடர்ந்து 6வது இடத்தில் உள்ளது.

Story image

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 7.25 ஆர்பி புள்ளிகளுடன் 7வது இடத்திலும், பாக்கியலட்சுமி தொடர் 7.19 ஆர்பி புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளது.

ஆனந்த ராகம் தொடர் 7.16 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 9வது இடத்திலும், சிறகடிக்க ஆசை தொடர் 6.87  டிஆர்பி புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.