

முக்கிய தொடரில் ஒன்றில் காற்றுக்கென்ன வேலி கதாநாயகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் காற்றுக்கென்ன வேலி. இந்தத் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இத்தொடர் விரைவில் நிறைவடையவுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டுமுதல் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் இளம்தலைமுறை ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. தற்போதுவரை 803 எபிஸோடுகள் ஒளிபரப்பாகியுள்ளன.
காற்றுக்கென்ன வேலி தொடரில் பிரியங்கா குமார், சுவாமிநாதன் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
இத்தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், காற்றுக்கென்ன வேலி தொடரின் கதாநாயகன் சுவாமிநாதன், மகாநதி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: செவ்வந்தி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்!
சுவாமிநாதன் நடித்துள்ள காட்சிகள் விரைவில் மகாநதி தொடரில் ஒளிப்பரப்பாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.