ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

கவனம் ஈர்க்கும் கருமேகங்கள் கலைகின்றன படத்தின் டிரைலர்! 

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2023, 9:39 pm IST

அருவி படத்தில் நடித்து கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன். தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் இணைய உள்ளார். இதில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மம்தா மோகன்தாஸ் நடிக்க வேண்டிய படத்தில் அதிதிபாலன் நடித்துள்ளார்.  பாரதிராஜாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணமாக அவர் நடிக்க வேண்டிய தேதி வீணாகி விட்டது. பின்னர் அவர் கால்சீட் கிடைக்காததால் அவருக்கு பதில் அதிதி பாலன் நடித்தார். 

மனித உறவுகளை மையமாகக் கொண்ட கதைகளே தங்கர்பச்சானின் திரைமொழி வழக்கம். இந்த வரிசையில் தற்போது அவர் இயக்கியுள்ள படத்துக்கு "கருமேகங்கள் கலைகின்றன' என்று பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஈ.வீரசக்தி தயாரிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, யோகிபாபு, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதன் முறையாக தங்கர் பச்சானுடன் இணைதுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தந்தையர் தினத்தினை முன்னிட்டு படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகியானது. தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.