தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யாவைத் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப் பிரபலங்கள் விவாகரத்தை அறிவித்து வருகின்றனர்.
தெலுங்கு சினிமாவில் நட்சத்திர தம்பதிகளான நாக சைதன்யா - சமந்தா ஆகிய இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர்,
அதனைத் தொடர்ந்து தற்போது, ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் திரைப்படத்தில் நாயகியாக நடித்த நிஹரிகா - சைதன்யா தம்பதியினர் விவாகரத்தை அறிவித்துள்ளனர். திருமணம் நடைபெற்று 3 ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், இருவரும் சம்மதத்துடன் பிரிவதாக தங்களின் சமூகவலைதளங்களில் அறிவித்துள்ளனர்.
இதேபோன்று தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்றழைக்கப்படும் பவன் கல்யாணும் தனது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஏற்கெனவே இரு முறை விவாகரத்து பெற்றவர். அதனைத் தொடர்ந்து ரஷியாவைச் சேர்ந்த மாடலான அன்னா லெஷ்னேவாவை 3வதாக திருமணம் செய்துகொண்டார்.
தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பவன் கல்யாண் தனது 3வது மனைவியை விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் பரவுகிறது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட பவன் கல்யாண், ஜனசேனா எனும் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










