25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தமிழில் ரீமேக்காகும் பிரபல தெலுங்கு சீரியல்!

கதாநாயகி யார் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Published On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST


தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்களைக் கவர்ந்த தொடர், தமிழ் மொழியில் எடுக்கப்படவுள்ளது. 

ஒருசில தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையில், ஒருசில தொடர்கள் காப்புரிமை பெற்று புதிதாக தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப எடுக்கப்படுகின்றன. 

தெலுங்கு மொழியில் ஒளிபரப்பான நுவ்வு நேனு பிரேமா என்ற தொடர் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடர் இளம் தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் சுவாமிநாதன் ஆனந்தராமன் மற்றும் பவித்ரா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர்.

தமிழுக்கு வரவுள்ள நுவ்வு நேனு பிரேமா தொடர் 

தமிழுக்கு வரவுள்ள நுவ்வு நேனு பிரேமா தொடர் 

இந்தத் தொடர் தற்போது தமிழ் மொழியில் எடுக்கப்படவுள்ளது. இதிலும் சுவாமிநாதன் ஆனந்தராமன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், தமிழில் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர். 

இவருக்கு ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.