தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி மக்களைக் கவர்ந்த தொடர், தமிழ் மொழியில் எடுக்கப்படவுள்ளது.
ஒருசில தொடர்கள் மொழிமாற்றம் செய்யப்படும் நிலையில், ஒருசில தொடர்கள் காப்புரிமை பெற்று புதிதாக தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப எடுக்கப்படுகின்றன.
தெலுங்கு மொழியில் ஒளிபரப்பான நுவ்வு நேனு பிரேமா என்ற தொடர் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடர் இளம் தலைமுறையினரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடரில் சுவாமிநாதன் ஆனந்தராமன் மற்றும் பவித்ரா ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்தனர்.

தமிழுக்கு வரவுள்ள நுவ்வு நேனு பிரேமா தொடர்
இந்தத் தொடர் தற்போது தமிழ் மொழியில் எடுக்கப்படவுள்ளது. இதிலும் சுவாமிநாதன் ஆனந்தராமன் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர், தமிழில் காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்தவர்.
இவருக்கு ஜோடியாக யார் நடிக்கவுள்ளார் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



