நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

சிம்பு, விஷால் உள்பட 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்கூட்டத்தில் 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2023, 5:31 pm IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் 5 முன்னணி நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 5 நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியது:

“தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு படப்பிடிப்புக்கு தேதி கொடுக்காமல் தாமதம் ஏற்படுத்தும் 5 நடிகர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகர்கள் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

மீண்டும் பழைய நிலையை தொடர்ந்தால், பொதுவெளியில் பெயர்கள் வெளியிடப்படும். மேலும் சம்பந்தப்பட்ட நடிகர்களுடன் படம் எடுப்பதை தவிர்த்து அவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகி பாபு ஆகிய 5 பேர்தான் அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.