இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ரெய்டு படத்தின் முக்கிய அறிவிப்பு!

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தின் புதிய பாடல் நாளை வெளியாகிறது.

News image
Updated On :23 அக்டோபர் 2023, 4:03 pm IST

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தின் புதிய பாடல் நாளை(அக்.24) வெளியாகிறது.

சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது. தற்போது விக்ரம் பிரபு ‘ரெய்டு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. 

'ரெய்டு' திரைப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கார்த்தி இயக்கி இருக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே மணிகண்ணன் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர்.

ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத்தொகுப்பும், கே.கணேஷ் ஆக்‌ஷன் காட்சிகளையும் கவனித்திருக்க, இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ரெய்டு திரைப்படத்தின் புதிய பாடலான அழகு செல்லம் பாடல் நாளை(அக்.24) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.