தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

நடிகை லைலாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன்!

மாய தோட்டா, வதந்தி போன்ற இணையத் தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் குமரன். இவர் வதந்தி தொடரில் நடிகை லைலாவுடன் நடித்திருந்தார். 

News image
Updated On :24 அக்டோபர் 2023, 5:04 pm IST

நடிகர் விஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை லைலாவுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன் தங்கராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் (அக். 24) தொடங்கியுள்ள நிலையில், உடன் நடிக்கும் நடிகர்களின் பட்டியலையும் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டிருந்தது.

அதில் நடிகை ஸ்நேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோருடன் நடிகை லைலாவும் நடிக்கவுள்ளார். 

இதனிடையே நடிகை லைலாவுக்கு நடிகர் குமரன் தங்கராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்தவர். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் முதல் பாகம் முடிந்து, இரண்டாவது பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. 

குமரன் தங்கராஜும் திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இவர் மாய தோட்டா, வதந்தி போன்ற இணையத் தொடர்களிலும் நடித்து கவனம் ஈர்த்தவர். வதந்தி தொடரில் நடிகை லைலாவுடன் குமரன் நடித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.