தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

காதலரை மணந்த சின்னத்திரை நடிகை!

பாவம் கணேசன் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்த நடிகை ஷிமோனா ஜேம்ஸுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

News image
Updated On :30 அக்டோபர் 2023, 5:30 pm IST

பாவம் கணேசன் தொடரில் முன்னணி பாத்திரத்தில் நடித்த நடிகை ஷிமோனா ஜேம்ஸுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாவம் கணேசன் தொடரில் நடித்துவருபவர் நடிகை ஷிமோனா ஜேம்ஸ். இவரி பாவம் கணேசன் தொடரில் பிரியா என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இத்தொடரின் நாயகனாக நவீன், நாயகியாக நேகா ஆகியோர் நடித்துவருகின்றனர். இந்தத் தொடரில் முக்கிய பாத்திரத்தில் ஷிமோனா நடித்து வருகிறார். 

Story image

ஷிமோனா தனது ஆரம்பகாலகட்டங்களில், இசை ஆல்பம்களில் நடித்துவந்தார். அதன் விளைவாக பாவம் கணேசன் தொடரில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவர் நாயகி தொடரிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே இவர் கிரண் நேதனல் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். ஷிமோனாவும்  கிரண் நேதனலும் நீண்ட நாள் நண்பர்கள். இவர்களின் காதல் தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

இவர்களின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. சின்னத்திரை பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலர் விழாவில் கலந்துகொண்டனர். 

சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.