சூர்யா - ஜோதிகா இணை தயாரிப்பில் உருவான திரைப்படம் உடன்பிறப்பே. இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் ஜோதிகா இணைந்து நடித்திருந்த இப்படம், அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்தது.
நேரடியாக, அமேசான் பிரைம் ஓடிடியில் தளத்தில் வெளியான உடன்பிறப்பே கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் சசிகுமாரின் நடிப்பு பேசப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இரா.சரவணன் உடன்பிறப்பேவின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம். இதற்காக, ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
நடிகை ஜோதிகா நடிப்பில் இறுதியாக வெளியான காதல் தி கோர், சைத்தான் படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.