காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பிரேமலு - 2 வாய்ப்பு இல்லை: திலீஷ் போத்தன்

பிரேமலு - 2 திரைப்படம் கைவிடப்படுவதாக திலீஷ் போத்தன் அறிவிப்பு...

naslen, mamitha baiju

நஸ்லன், மமிதா பைஜூ

Published On :

பிரேமலு படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக இயக்குநர் திலீஷ் போத்தன் கூறியுள்ளார்.

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மிகப்பெரிய வெற்றிப்படமானது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பிரேமலுவின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியானது.

இயக்குநர் கிரிஷ் ஏடி உள்பட அதே படக்குழுவினர் இணைவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் துவங்காமல் இருந்தன.

பிரேமலு படத்தைத் தொடர்ந்து நஸ்லன் ஆலப்புழா ஜிம்கானா படத்தில் நடித்தார். அப்படம் வெற்றிப்படமாகவே அமைந்தது. மமிதா பைஜூவும் தமிழில் முக்கியமான நாயகியாக வளர்ந்துள்ளார்.

இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர், நடிகர் திலீஷ் போத்தன், ”பிரேமலு - 2 திரைப்படத்திற்கு வாய்ப்பே இல்லை. அதற்கு பதில், பத்தேலம் குடும்ப யூனிட் வெளியாகும்” எனக் கூறியுள்ளார். இதனால், பிரேமலு - 2 கைவிடப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

Director Dileesh Pothan has stated that the second part of the film Premalu - 2 has been dropped.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.