தமிழ் சினிமாவில் அதிகரித்துவரும் ரீ ரிலீஸ் டிரெண்டில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வசூலைப் பெற்றன. சமீபத்தில், கில்லி வெளியாகி ரூ.22 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படம், பல திரைகளில் வெளியிடப்பட்டுள்ளதால் இன்னும் வசூலைக் குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ உள்ளிட்ட இரண்டு படங்களையும் மறுவெளியீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இரு படங்களும் வசூலில் வெற்றி பெற்றவை என்பதுடன் விஜய் சேதுபதியின் மார்க்கெட்டையும் உயர்த்தியவை.