நடிகை பிரியா பவானி சங்கர் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார். செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்த இவர், மேயாத மான் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, பத்து தல, ரத்னம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாது சென்னையில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
பிரியா பவானி சங்கர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் கலமையான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டல் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
பொதுவாகவே சமூக வலைதளங்களில் பிரியா பவானி சங்கர் நடித்தாலே அந்தப் படம் வெற்றி பெறாது என கிண்டல் செய்பார்கள். இது குறித்து வேதனை அடைந்த பிரியா பவானி சங்கர் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:
சிரித்துக்கொண்டே ஒருவரை திட்டுவது என்பது எப்படி எனக்கு புரியவில்லை. வலுவாக இருப்பதாக நடிக்கிறேன். ஒருவரை அதிர்ஷடமில்லாதவர் என அழைப்பது சரியானது அல்ல. அது நிச்சயம் சம்பந்தபட்டவரை பாதிக்கும். இப்படி சமூக வலைதளங்களில் பேசுவது வருத்தமளிக்கிறது.

பிரியா பவானி சங்கர்
ஒரு நாயகனை பார்த்து யாராவது இப்படி சொல்லுவார்களா? படங்கள் சரியாக போகவில்லை என யாராவது ஹீரோக்களை பார்த்து அல்லது ஆணை பார்த்து அதிர்ஷ்டமில்லாதவன் என கிண்டல் செய்வதுண்டா? இது ஒரு ஆணாதிக்க மனோபாவம்.
யாராவது ஒருவரை அதிர்ஷ்டமில்லாதவர் எனும்போது அவருடைய பெற்றோர்கள் எவ்வளவு வருத்தமடைவார்கள். எனது பெற்றோரை நினைத்து நான் கவலையுற்றேன். நான்கு பெரிய படங்களில் நடித்தது எனக்கு அதிர்ஷ்டத்தால் வரவில்லை திறமையினால் வந்தது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்! எதற்கு தெரியுமா?

அமைச்சர் பங்கேற்ற சென்னை மாநகராட்சி நிகழ்ச்சியை புறக்கணித்த மேயர் பிரியா!

சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! என்ன செய்யப் போகிறார் மேயர் பிரியா?

மேயர் பிரியா, சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |





