திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

யாராலும் இப்படி நடிக்க முடியாது... பார்வதியைப் புகழ்ந்த ஐஸ்வர்யா லட்சுமி!

நடிகை பார்வதி திருவோத்துவின் நடிப்பு கவனம் பெற்று வருகிறது.

News image

பார்வதி திருவோத்து, ஐஸ்வர்யா லட்சுமி.

Updated On :20 ஆகஸ்ட் 2024, 1:08 pm IST

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிகை பார்வதி திருவோத்துவின் நடிப்பைப் பாராட்டியுள்ளார்.

நடிகை பார்வதி பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காக பல பாராட்டுகளைப் பெற்றவர் மரியான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

தொடர்ந்து பல மலையாளப் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து மிக முக்கியமான நடிகையானார்.

குறிப்பாக, பெங்களூர் டேஸ், சார்லி, என்னு நிண்டே மொய்தீன் படங்கள் அவரை அடுத்தக்கட்டதிற்கு அழைத்துச் சென்றன.

இன்று தென்னிந்தியளவில் கவனம் பெற்றுள்ள நடிகையாக இருக்கிறார். அதேநேரம், தன் நடிப்புத் திறனையும் அபாரமாக வளர்த்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு மற்றும் தங்கலான் திரைப்படங்களில் பார்வதி தன் நடிப்பால் ஆச்சரியப்படுத்தினார்.

Story image

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த 2 நாள்களில் உள்ளொழுக்கு மற்றும் தங்கலான் திரைப்படத்தைப் பார்த்தேன். நடிகை பார்வதியின் திறமையைக் கண்டு பிரமிப்பில் இருக்கிறேன். முழுமையான திறமைசாலி. அன்புள்ள பார்வதி, நீங்கள் தங்கம். ஒவ்வொரு முறையும் திரையில் உங்களைப் பார்க்கும்போது நீங்கள் செய்ததை யாராலும் செய்ய முடியாது என்பதையே அறிகிறேன். நீங்களே சிறந்தவர்.” எனப் பாராட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.