பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜீனி வெளியீடு எப்போது?

ஜெயம் ரவியின் ஜீனி படம் குறித்து...

Published On :

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ஜீனி படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி பிரதர் படத்தின் தோல்வியிலிருந்து மீள காதலிக்க நேரமில்லை படத்திற்காகக் காத்திருக்கிறார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தயாரான இப்படத்தின் முதல் பாடலான ’என்னை இழுக்குதடி’ ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் பணிகள் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஜெயம் ரவி ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் அர்ஜுனன் ஜூனியர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

வேல்ஸ் இண்டர்நெஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'ஜீனி' திரைப்படம், திரையரங்க உரிமைகளை தவிர்த்து ஏற்கனவே ரூ. 60 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தை அடுத்தாண்டு (2025) மார்ச் மாதம் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.