தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் ரஞ்சித்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 10வது வாரத்தில் நடிகர் ரஞ்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

News image

ரஞ்சித் / தர்ஷிகா - படம் | எக்ஸ்

Updated On :9 டிசம்பர் 2024, 5:11 pm IST

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 10வது வாரத்தில் நடிகர் ரஞ்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களாக ரஞ்சித், மஞ்சரி தேர்வான நிலையில், இவர்களிடையே நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதால், ரஞ்சித் கேப்டனாக தேவாகியுள்ளார்.

கடந்த வாரம் ஜெஃப்ரி கேப்டனாகத் தேர்வானார். இவரின் தலைமையின் கீழ் ஏஞ்சல்களும் டெவில்களும் டாஸ்க் நடைபெற்றது.

இந்த வாரம் ரஞ்சித் கேப்டனாகியுள்ளதால், அவரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரஞ்சித் கோபப்படாமல் சாந்தமாக பேசும் நபர் என்பதால், பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவார் என்பது போன்ற கருத்துகளும் எழுந்துள்ளன.

பிக் பாஸ் வீட்டிலிருந்து இரு போட்டியாளர்கள் ஞாயிற்றுக்கிழமையான நேற்று வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அன்றைய இரவு ரஞ்சித்திடம் பேசிய முத்துக்குமரன்,

''இந்த வாரம் நீங்கள் கேப்டனாக வாய்ப்பு அதிகம் உள்ளது. கேப்டனாக நீங்கள் பொறுப்புடனும் சரியான வழியிலும் செயல்பட வேண்டும். நான் கேப்டனாக இருந்தபோது சரி என நினைத்தவை எல்லாம் தவறாக வெளிப்பட்டது. அதுபோன்று நடக்காமல் கவனமாக செயல்படுங்கள்'' என ரஞ்சித்திடம் பேசுகிறார்.

இதனால் ஆண்கள் அணியில் உள்ள பலரும் ரஞ்சித்துக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும், பெண்களிடமிருந்து பிரச்னை எழ வாய்ப்புள்ளதாகவும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.