காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பாதல் லோக் சீசன் - 2 வெளியீட்டுத் தேதி!

பாதல் லோக் தொடரின் இரண்டாவது சீசன் வெளியீடு குறித்து...

News image
Updated On :24 டிசம்பர் 2024, 2:00 pm IST

பிரபல இணையத் தொடரான பாதல் லோக்கின் இரண்டாவது சீசன் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இணையத் தொடர் பாதல் லோக் (paatal lok). இயக்குநர்கள் அவினாஷ் அருண், ப்ரோசித் ராய் இயக்கத்தில் உருவான இத்தொடரில் ஒரு பத்திரிகையாளரின் பார்வையிலிருந்து கொலைகளும், அதன் பின்னணிகளும் விரிவாக அலசப்பட்டிருக்கும்.

இந்தியளவில் இதுவரை வெளியான தொடர்களில் பாதல் லோக் தனித்துவமான இடத்தையே பெற்றிருக்கிறது.

நடிகர்கள் ஜெய்தீப் அலாவத், அபிஷேக் பானர்ஜி, நீரஜ் கபி உள்ளிட்டோர் நடிப்பில் கிரைம், திரில்லர் பாணியில் இத்தொடர் உருவாகியிருந்தது.

முதல் சீசனில் ஒரு திருப்பத்துடன் தொடர் நிறைவடைந்ததால் அதன் இரண்டாம் பாகம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால், அதற்கான படப்பிடிப்புகள் சில மாதங்களாக நடைபெற்று வந்தன.

Story image

இந்த நிலையில், அவினாஷ் அருண் இயக்கிய பாதல் லோக் தொடரின் இரண்டாவது சீசன் அடுத்தாண்டு ஜனவரி 17 ஆம் தேதி வெளியாகும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.