பாக்கியலட்சுமி தொடரில் நடித்தும்வரும் கம்பம் மீனா விபத்தில் சிக்கியதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரையில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்களை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடர் குடும்ப தலைவிகளை அதிகம் ஈர்த்துள்ளது. மேலும், இளம் தலைமுறையினரும் அதிகம் விரும்பி பார்க்கும் தொடராகவும் உள்ளது.
கணவரால் ஏமாற்றப்படும் பெண், உழைப்பினால் சுயமாக முன்னேறி எப்படி குடும்பத்தை கவனிக்கிறாள் என்பதை மையமாக கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தொடரில், செல்வி பாத்திரத்தில் நடித்துவருபவர் நடிகை கம்பம் மீனா. இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கியுள்ளார். அதில் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், “நேற்று (12/02/2024) இரவு 8.30 மணிக்கு தலைக்கு வந்தது தலைபாகையோடு போய் விட்டது …..(இப்படித்தான் மனதை தேற்றிகொண்டேன்)….. எல்லாம் அவன் செயல் ….” எனப் பதிவிட்டுள்ளார்.
கம்பன் மீனாவின் பதிவிற்கு அவரின் ரசிகர்கள் “நீங்க சொந்த ஊருக்கு சென்று கோயில் மற்றும் நிகழ்ச்சிகள் பங்கெடுப்பதால் உங்க மேல பொறாமை, அதான் இப்படி ஆகிடுச்சு” என்றுக் கூறி ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.