விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

இந்தாண்டு எனக்கு திருமணம்: வைரலாகும் பிரேம்ஜியின் பதிவு

இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடைபெறும் என்று பிரேம்ஜி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:55 pm IST

இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடைபெறும் என்று பிரேம்ஜி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி புன்னகை பூவே படத்தில் அறிமுகமானாலும், சிம்புவின் வல்லவன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே கவனம் பெற்றார்.

தொடர்ந்து சென்னை 28, மங்காத்தா, சந்தோஷ் சுப்பிரமணியம், சரோஜா, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் சத்திய சோதனை.  ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு சத்தியசோதனை படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார்.

சத்தியசோதனை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமரிசனங்களை பெற்றது. இந்த நிலையில் பிரேம்ஜி அவரது எக்ஸ் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, "இந்தாண்டு எனக்கு திருமணம்" எனப் பதிவிட்டுள்ளார். 

பிரேம்ஜி அமரனுக்கு 44 வயதாகும் நிலையில், அவரின் திருமணம் குறித்த பதிவு, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.