நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

இந்தாண்டு எனக்கு திருமணம்: வைரலாகும் பிரேம்ஜியின் பதிவு

இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடைபெறும் என்று பிரேம்ஜி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 2:10 pm IST

இந்த ஆண்டு தனக்கு திருமணம் நடைபெறும் என்று பிரேம்ஜி அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரனின் மகனான பிரேம்ஜி புன்னகை பூவே படத்தில் அறிமுகமானாலும், சிம்புவின் வல்லவன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே கவனம் பெற்றார்.

தொடர்ந்து சென்னை 28, மங்காத்தா, சந்தோஷ் சுப்பிரமணியம், சரோஜா, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த திரைப்படம் சத்திய சோதனை.  ஒரு கிடாயின் கருணை மனு படத்துக்குப் பிறகு சத்தியசோதனை படத்தை சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார்.

சத்தியசோதனை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமரிசனங்களை பெற்றது. இந்த நிலையில் பிரேம்ஜி அவரது எக்ஸ் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, "இந்தாண்டு எனக்கு திருமணம்" எனப் பதிவிட்டுள்ளார். 

பிரேம்ஜி அமரனுக்கு 44 வயதாகும் நிலையில், அவரின் திருமணம் குறித்த பதிவு, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.