நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி பதிலளித்துள்ளார்.
எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் எல்கேஜி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கதாநாயகனாக வலம் வருகிறார்.
‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்துள்ளார். நாளை (ஜன.25) இந்தப் படம் வெளியாக உள்ளது.
இதன் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே.பாலாஜி விஜய் உடனான படம் குறித்து பேசியுள்ளார். அதில், “வாரிசு, லியோ படங்களுக்கு முன்பாக நான் விஜய்யிடம் கதை கூறினேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. யோசித்து பிறகு பண்ணலாம். ஏப்ரல் மாதத்தில் தொடங்கலாம் என விஜய் கூறினார். ஆனால் நான் எந்த ஏப்ரல் எனக் கேட்க மறந்துவிட்டேன். மேலும், எனக்கு அவருடன் பணியாற்ற மிகுந்த ஆர்வமாக இருக்கிறது. விஜய்க்கு கதை எழுத குறைந்தது 6 மாதம் ஆவது தேவைப்படும்” எனக் கூறினார்.
இதையும் படிக்க: விராட் கோலிக்குப் பதிலாக ரஜத் படிதார்!
சமீபத்தில் அன்னபூரணி, அனிமல் படம் குறித்து பேசி இணையத்தில் வைரலானார் ஆர்.ஜே. பாலாஜி. தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் படத்தில் நடித்து வருகிறார்.