ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்புதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புவிவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை அமைச்சர்ஒரே நாளில் 2,036 காவலா்கள் பணியிட மாற்றம்பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை
/

விஜய் படம் என்னாச்சு? ஆர்.ஜே.பாலாஜி பதில்!

நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி பதிலளித்துள்ளார். 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:45 pm IST

நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி பதிலளித்துள்ளார்.  

எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் எல்கேஜி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கதாநாயகனாக வலம் வருகிறார். 

‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’  இயக்குநர் கோகுல் இயக்கத்தில் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் நடித்துள்ளார். நாளை (ஜன.25) இந்தப் படம் வெளியாக உள்ளது. 

Story image

இதன் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே.பாலாஜி விஜய் உடனான படம் குறித்து பேசியுள்ளார். அதில், “வாரிசு, லியோ படங்களுக்கு முன்பாக நான் விஜய்யிடம் கதை கூறினேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. யோசித்து பிறகு பண்ணலாம். ஏப்ரல் மாதத்தில் தொடங்கலாம் என விஜய் கூறினார். ஆனால் நான் எந்த ஏப்ரல் எனக் கேட்க மறந்துவிட்டேன். மேலும், எனக்கு அவருடன் பணியாற்ற மிகுந்த ஆர்வமாக இருக்கிறது. விஜய்க்கு கதை எழுத குறைந்தது 6 மாதம் ஆவது தேவைப்படும்” எனக் கூறினார். 

சமீபத்தில் அன்னபூரணி, அனிமல் படம் குறித்து பேசி இணையத்தில் வைரலானார் ஆர்.ஜே. பாலாஜி. தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் படத்தில் நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.