மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சசிகுமாரின் எவிடன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சசிகுமார் நடிக்கும் எவிடன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

Published On :

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் களமிறங்கியவர் சசிகுமார். சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார், அதன்பின் நடிப்பில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. தொடர்ந்து, எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’ நாவலை அவர் இயக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

தற்போது, காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குநர் ஆர்டிஎம் இயக்கும் எவிடன்ஸ் நடித்து வந்தார் சசிகுமார்.

Story image

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸின் சார்பில் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா, யோகி பாபு நடிக்கின்றனர். இப்படத்துக்கு ரான் ஈதன் ஹோஹான் இசையமைக்கிறார். கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலைடில், இப்படத்தின்  படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.