சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

சசிகுமாரின் எவிடன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் சசிகுமார் நடிக்கும் எவிடன்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:43 pm IST

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குநராகவும் களமிறங்கியவர் சசிகுமார். சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார், அதன்பின் நடிப்பில் மட்டும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் வெளியான அயோத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றது. தொடர்ந்து, எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி எழுதிய ‘குற்றப் பரம்பரை’ நாவலை அவர் இயக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

தற்போது, காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் இயக்குநர் ஆர்டிஎம் இயக்கும் எவிடன்ஸ் நடித்து வந்தார் சசிகுமார்.

Story image

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸின் சார்பில் கதிரேசன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் நவீன் சந்திரா, யோகி பாபு நடிக்கின்றனர். இப்படத்துக்கு ரான் ஈதன் ஹோஹான் இசையமைக்கிறார். கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலைடில், இப்படத்தின்  படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.