
கைதி படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் கார்த்தி பதிலளித்துள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கார்த்தி கூட்டணியில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது. இப்படத்திற்குப் பின்பே லோகேஷ் கனகராஜ் பிரபலமடைந்தார். தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கினார்.
தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், ரசிகர்களைச் சந்தித்த நடிகர் கார்த்தி இந்தாண்டில் தனது நடிப்பில் மெய்யழகன், வா வாத்யாரே ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகும் என்பதைத் தெரிவித்ததுடன் கைதி - 2 திரைப்படம் அடுத்தாண்டு தயாராகும் எனக் கூறினார்.
இதனால், கூலி திரைப்படத்தை முடித்ததும் லோகேஷ் கனகராஜ் கைதி - 2 பணிகளில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.