ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

காதலி, மனைவி பிடித்த மாதிரி அமைவதில்லை: இமான்

இசையமைப்பாளர் இமான் அளித்த நேர்காணல் கவனம் பெற்றுள்ளது.

News image
Updated On :20 ஜூலை 2024, 4:00 pm IST

இசையமைப்பாளர் இமான் அளித்த நேர்காணல் கவனம் பெற்றுள்ளது.

தமிழின் முன்னணி இசையமைப்பாளரான டி.இமான் தொடர்ந்து திரைப்படங்களுக்குப் பணியாற்றி வருகிறார். இவர் இசையமைப்பில் உருவான, டீன்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இமான், “வாழ்க்கையில் ஆசைப்பட்ட எல்லாமும் கிடைப்பதில்லை. நமக்குப் பிடித்த தொழிலும் சரியாக அமைவதில்லை. பிடித்த காதலியும் பிடித்த மனைவியாக ஆவதில்லை. மனைவியும் பிடித்த காதலியாக இருப்பதில்லை.

நல்ல பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகளும் அமைவதில்லை. இப்படி, ஒவ்வொருவருக்கும் எதாவது ஒன்று கிடைக்காமலே இருக்கிறது. ஆனால், எனக்கு ஆசைப்பட்ட விசயம் கிடைத்தது. ஒரு இசைக் கலைஞனாக இருந்தாலே போதும் என்றே நினைத்தேன். ஆனால், இசையமைப்பாளராக உள்ளேன். இதற்காக, எப்போதும் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவனாகவே உணர்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

2008-ல் மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார் இமான். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உண்டு. மோனிகாவை விவாகரத்து செய்து கடந்த ஆண்டு மறுமணம் செய்துகொண்டார். இந்த விவகாரத்து பல சர்ச்சைகளைக் கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.