வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

இது என் அப்பா.. நினைவைப் பகிர்ந்த ஸ்ரேயா ரெட்டி!

நடிகை ஸ்ரேயா ரெட்டி தன் தந்தையின் நினைவைப் பகிர்ந்துள்ளார்.

News image
Updated On :22 ஜூலை 2024, 3:49 pm IST

நடிகை ஸ்ரேயா ரெட்டி தன் தந்தையின் நினைவைப் பகிர்ந்துள்ளார்.

’ஏலே இசுக்கு..’ என்றாலே ஸ்ரேயா ரெட்டியின் முகமே நினைவுக்கு வருகிறது. திமிரு படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய ஸ்ரேயா ரெட்டிக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

இறுதியாக இவர் நடித்த சலார் மற்றும் தலைமைச் செயலகம் தொடரில் இவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. எந்த படத்தில் நடித்தாலும் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறார்.

ஒரு நடிகையாக, தன் திறனை வெளிப்படுத்தும் முயற்சிகளிலேயே இருக்கும் ஸ்ரேயா ரெட்டி, இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

அப்படத்தில், 1979 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துடன் மோதிய டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஐயன் போதமை, இந்திய விக்கெட் கீப்பர் பரத் ரெட்டி ரன் அவுட் செய்வார். அதனைப் பார்த்த, கேப்டன் கபில் தேவ் உற்சாகத்தில் குதிப்பார்.

இதில், பரத் ரெட்டியைக் குறிப்பிட்டு “இது என் தந்தை” என ஸ்ரேயா ரெட்டி தன் நினைவைப் பகிர்ந்துள்ளார்.

விக்கெட் கீர்ப்பரான பரத் ரெட்டி 1978 - 1981 வரை 3 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

பரத் ரெட்டி

பரத் ரெட்டி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.