இந்தியன் - 2 யோசிக்க வைக்கும்: ஷங்கர்
இந்தியன் - 2 திரைப்படம் ரசிகர்களை யோசிக்க வைக்கும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.


இந்தியன் - 2 திரைப்படம் ரசிகர்களை யோசிக்க வைக்கும் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான இந்தியன் - 2 திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது.
இந்த நிலையில், இன்று நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், பாபி சிம்ஹா இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய இயக்குநர் ஷங்கர், “என் படங்களில் இப்படி நடந்தால் எப்படியிருக்கும் என்பதே கதையாக இருக்கும். இந்தியன் - 2 படம் இந்தியன் தாத்தா இப்போது வந்தால் எப்படியிருக்கும் என்பதைப் பற்றித்தான். இப்படத்திற்கா நடிகர் கமல்ஹாசன் கடுமையாக உழைத்திருக்கிறார். 70 நாள் படப்பிடிப்பில் தினமும் 3 மணி நேரம் மேக்கப் செய்வது சாதாரணமானது அல்ல.
ஒப்பனையைக் கலைக்கவும் அதிக நேரமெடுக்கும். சண்டைக் காட்சிகளிலும் தீவிரமான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இந்தியன் திரைப்படம் தமிழகத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகியிருந்தது. இந்தியன் - 2 திரைப்படம் இந்தியளவில் நடக்கும் பிரச்னைகளைப் பேசியிருக்கிறது. கண்டிப்பாக, இந்தியன் - 2 ரசிகர்களை யோசிக்க வைக்கும். ” எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...