திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

மறைமுகமான ஆதாரப்புள்ளி: கமல்ஹாசன் பகிர்ந்த தத்துவம்!

நடிகர் கமல்ஹாசன் பதிவிட்ட புதிய புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2024, 6:35 pm IST

நடிகர் கமல்ஹாசன் பதிவிட்ட புதிய புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகரும் இயக்குநருமான கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படம் முடியும் தருவாயில் இருக்கிறது. கமலின் 234வது படமான தக் லைஃப் படத்தினை மணிரத்னம் இயக்குகிறார். 237வது படத்தினை சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் சகோதரர்கள் இயக்குகிறார்கள்.

கமல்235, 236 படங்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் படம் 235ஆவதாக இருக்கலாம் அல்லது கல்கி 2898 படம் இருக்கலாம் எனவும் 236வது படத்தினை லோகேஷ் இயக்குவாரெனவும் தகல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகர் கமல் புதிய புகைப்படத்தினை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில் கேமிராவுடன் கையில் அலைபேசியுடனும் தாண்டுவது போன்ற ஸ்டைலான புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியதாவது:

எனக்கும் என்னைப்போன்றவர்களுக்கும் “கலந்துகொள்வதன் மூலமாக கற்றுக்கொள்வது” பல விசயங்களை வேகமாக கற்றுக்கொடுகிறது. அதனால் முடிந்த அளவுக்கு தாண்டுகிறேன். இந்த மறைமுகமான ஆதாரப்புள்ளி நமது எடையை உள்புறமாக இழுக்கிறது எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.