லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்த இப்படம்ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று தோல்விப்படமானலும் சுமாரான வசூலைப் பெற்றது.
இதுகுறித்து, நேர்காணலில் பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படத்தின் தோல்விக்கான காரணங்களைப் பற்றி பேசினார்.
அதில், "லால் சலாம் படப்பிடிப்பில் 21 நாள்கள் எடுத்த காட்சிகள் காணாமல் போய்விட்டது. ஆயிரக்கணக்கான பேர் சூழ, 10 கேமராக்கள் வைத்து கிரிக்கெட் போட்டியை ஷூட் செய்தோம். அவையனைத்தும் காணாமல் போய்விட்டது. மீண்டும் படப்பிடிப்புக்குச் சென்று தொலைந்த ஹார்ட் டிஸ்க்கில் (hard disk) இருந்த காட்சிகளை எடுக்கலாம் எனச் சொன்னார்கள். ஆனால், அது கடினமானது என்பதால் இருக்கும் காட்சிகளை வைத்தே படத்தை எடிட்டிங் செய்தோம். ஹார்ட் டிஸ்க் தொலையாமல் இருந்திருந்தால் நாங்கள் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாகக் கூறியிருப்போம்” எனக் கூறினார்.
இந்த விடியோவைப் பகிர்ந்த பலரும், “படத்தின் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது என பொய் சொல்லக் கூடாது” என்றும் “தயாரிப்பாளர் பணம்தானே? உங்கள் பணமாக இருந்தால் இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொல்வீர்களா?” என கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.