இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

நடிகை மதுமிதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எதிர்நீச்சல் குழு!

பெங்களூருவில் பிறந்த மதுமிதா, முதன்முதலில் கன்னட தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

News image
Updated On :12 மார்ச் 2024, 4:11 pm IST

எதிர்நீச்சல் நாயகி மதுமிதாவுக்கு எதிர்நீச்சல் குழுவினரும் நண்பர்களும் இணைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், 18 நாளுக்கு முன்பே தனியார் விடுதியில் கேக் வெட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

நடிகை மதுமிதா மார்ச் 29ம் தேதி தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். இதனையொட்டி முன்கூட்டியே இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகர்கள் நடிகர்கள் கமலேஷ், விபூ ராமன் மற்றும் நடிகை வைஷ்ணவி ஆகியோர் இணைந்து கேக் வெட்டியுள்ளனர்.

நடிகை மதுமிதா இரவு உணவுக்காக உணவகத்துக்குச் சென்றிந்தபோது, அங்கு வந்த மதுமிதாவின் நண்பர்கள் கேக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

Story image

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் நடிகை மதுமிதா நாயகியாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு நம்பர் ஒன் கோடாலு என்ற தெலுங்கு தொடரில் நடித்திருந்தார். அந்த தொடர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் எதிர்நீச்சல் வாய்ப்பு கிடைத்தது.

பெங்களூருவில் பிறந்த இவர், முதன்முதலில் கன்னட தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.